முகப்பு |
பாண்டியன் மாறன் வழுதி |
301. குறிஞ்சி |
'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி |
||
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை |
||
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், |
||
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க் |
||
5 |
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், |
|
பாவை அன்ன வனப்பினள் இவள்' என, |
||
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி, |
||
யாய் மறப்பு அறியா மடந்தை- |
||
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே. | உரை | |
சேட்படுத்து, 'பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான்' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.-பாண்டியன் மாறன் வழுதி
|