முகப்பு |
பெருந்தலைச் சாத்தனார் |
262. பாலை |
தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர், |
||
ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர, |
||
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து, |
||
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய், |
||
5 |
துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும் |
|
பணைத் தோள், அரும்பிய சுணங்கின், கணைக் கால், |
||
குவளை நாறும் கூந்தல், தேமொழி |
||
இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்ப, |
||
'பிரிவல்' நெஞ்சு, என்னும்ஆயின், |
||
10 |
அரிது மன்றம்ம, இன்மையது இளிவே. | உரை |
தலைமகள் ஆற்றாக் குறிப்பு அறிந்து, பிரிவிடை விலக்கியது.-பெருந்தலைச் சாத்தனார்
|