முகப்பு |
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
297. குறிஞ்சி |
பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப, |
||
நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்; |
||
பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ, |
||
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை; |
||
5 |
'எவன்கொல்?' என்று நினைக்கலும் நினைத்திலை; |
|
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே; |
||
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம் |
||
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் |
||
மெல்ல வந்து, நல் அகம் பெற்றமை |
||
10 |
மையல் உறுகுவள், அன்னை; |
|
ஐயம் இன்றிக் கடுங் கவவினளே. | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், தலைமகன் கேட்பச் சொல்லி யது; தோழி தலைமகளை அறத்தொடுநிலை வலிப்பித்ததூஉம் ஆம்.- மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|
321. முல்லை |
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை |
||
பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயர, |
||
கான முல்லைக் கய வாய் அலரி |
||
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய, |
||
5 |
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை, |
|
புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல |
||
வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை? |
||
வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக, |
||
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற, |
||
10 |
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே. | உரை |
வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|