முகப்பு |
மிளைகிழான் நல்வேட்டனார் |
210. மருதம் |
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் |
||
மறு கால் உழுத ஈரச் செறுவின், |
||
வித்தொடு சென்ற வட்டி பற்பல |
||
மீனொடு பெயரும் யாணர் ஊர! |
||
5 |
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் |
|
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே; |
||
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் |
||
புன்கண் அஞ்சும் பண்பின் |
||
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே. | உரை | |
தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய், வாயில் நேர்ந்தது.-மிளைகிழான் நல்வேட்டனார்
|
349. நெய்தல் |
கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும், |
||
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும், |
||
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும், |
||
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு |
||
5 |
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் |
|
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை, |
||
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத |
||
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல, |
||
பின்னிலை முனியா நம்வயின், |
||
10 |
என் என நினையும்கொல், பரதவர் மகளே? | உரை |
தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.- மிளை கிழான் நல்வேட்டனார்
|