முகப்பு |
வண்ணப்புறக் கந்தரத்தனார் |
71. பாலை |
மன்னாப் பொருட் பிணி முன்னி, 'இன்னதை |
||
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து' எனப் |
||
பல் மாண் இரத்திர்ஆயின், 'சென்ம்' என, |
||
விடுநள் ஆதலும் உரியள்; விடினே, |
||
5 |
கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று, |
|
பிரிதல் வல்லிரோ-ஐய! செல்வர் |
||
வகை அமர் நல் இல் அக இறை உறையும் |
||
வண்ணப் புறவின் செங் காற் சேவல் |
||
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல் |
||
10 |
நும் இலள் புலம்பக் கேட்டொறும் |
|
பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே? | உரை | |
தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது.-வண்ணப்புறக் கந்தரத்தனார்
|