முகப்பு |
கிள்ளி |
141. பாலை |
இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய், |
||
மாரி யானையின் மருங்குல் தீண்டி, |
||
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை, |
||
நீடிய சடையோடு ஆடா மேனிக் |
||
5 |
குன்று உறை தவசியர் போல, பல உடன் |
|
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும் |
||
அருஞ் சுரம் எளியமன், நினக்கே; பருந்து பட, |
||
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை |
||
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி |
||
10 |
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த |
|
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள் |
||
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே. |
உரை | |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது.-சல்லியங்குமரனார்
|
390. மருதம் |
வாளை வாளின் பிறழ, நாளும் |
||
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் |
||
கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த |
||
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை |
||
5 |
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ, |
|
விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ; |
||
யாணர் ஊரன் காணுநன்ஆயின், |
||
வரையாமைஓ அரிதே; வரையின், |
||
வரைபோல் யானை, வாய்மொழி முடியன் |
||
10 |
வரை வேய் புரையும் நல் தோள் |
|
அளிய-தோழி!-தொலையுந பலவே. |
உரை | |
பாங்கு ஆயின வாயில் கேட்ப, நெருங்கிச் சொல்லியது; தலைமகள் தோழிக்கு உரைப் பாளாய், வாயிலாகப் புக்கார் கேட்ப, சொல்லியதூஉம் ஆம்.-ஒளவையார்
|