முகப்பு |
செவிலி |
198. பாலை |
சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்து |
||
ஓமை நீடிய கான் இடை அத்தம், |
||
முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள் |
||
கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தை |
||
5 |
தன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல் |
|
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை, |
||
வார்ந்து இலங்கு வால் எயிற்று, பொலிந்த தாஅர், |
||
சில் வளை, பல் கூந்தலளே, அவளே; |
||
மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை |
||
10 |
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த் |
|
தந்தைதன் ஊர் இதுவே; |
||
ஈன்றேன் யானே; பொலிக, நும் பெயரே! |
உரை | |
பின் சென்ற செவிலி இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.-கயமனார்
|