முகப்பு |
அட்டரக்கு உருவின் |
193. பாலை |
அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத் |
||
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ, |
||
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய், |
||
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை! |
||
5 |
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே; |
|
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் |
||
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக, |
||
யாரும் இல் ஒரு சிறை இருந்து, |
||
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே! | உரை | |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.
|