முகப்பு |
அந்தோ தானே |
324. குறிஞ்சி |
அந்தோ! தானே அளியள் தாயே; |
||
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல், |
||
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?- |
||
கோடு முற்று யானை காடுடன் நிறைதர, |
||
5 |
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் |
|
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின், |
||
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி, |
||
அம் சில் ஓதி இவள் உறும் |
||
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே! | உரை | |
தலைமகன், பாங்கற்குச் சொல்லியது; இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்
|