அம்ம வாழி.....நன்னுதற்கு

388. நெய்தல்
அம்ம வாழி, தோழி!-நன்னுதற்கு
யாங்கு ஆகின்றுகொல் பசப்பே-நோன் புரிக்
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ,
5
நடு நாள் வேட்டம் போகி, வைகறைக்
கடல் மீன் தந்து, கானற் குவைஇ,
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து,
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி,
பெரிய மகிழும் துறைவன் எம்
10
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே?

வரைவு நீட ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது;'மனையுள் வேறுபடாது ஆற்றினாய்' என்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்