முகப்பு |
அம்ம வாழி.....நன்னுதற்கு |
388. நெய்தல் |
அம்ம வாழி, தோழி!-நன்னுதற்கு |
||
யாங்கு ஆகின்றுகொல் பசப்பே-நோன் புரிக் |
||
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித் |
||
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ, |
||
5 |
நடு நாள் வேட்டம் போகி, வைகறைக் |
|
கடல் மீன் தந்து, கானற் குவைஇ, |
||
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து, |
||
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி, |
||
பெரிய மகிழும் துறைவன் எம் |
||
10 |
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே? | உரை |
வரைவு நீட ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது;'மனையுள் வேறுபடாது ஆற்றினாய்' என்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
|