முகப்பு |
அமர்க் கண் ஆமான் |
165. குறிஞ்சி |
அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது |
||
பணைத்த பகழிப் போக்கு நினைந்து, கானவன், |
||
'அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க' எனக் |
||
கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து, |
||
5 |
கிளையொடு மகிழும் குன்ற நாடன் |
|
அடைதரும்தோறும், அருமை தனக்கு உரைப்ப, |
||
'நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு |
||
அன்ன ஆகுக' என்னான்; |
||
ஒல்காது ஒழி; மிகப் பல்கின தூதே. | உரை | |
நொதுமலர் வரையும் பருவத்து, தோழி தலைவிக்கு அறத்தொடு நிலை பயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉம் ஆம்.
|