முகப்பு |
அமுதம் உண்க |
65. குறிஞ்சி |
அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!- |
||
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக் |
||
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ, |
||
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து, |
||
5 |
புலியொடு பொருத புண் கூர் யானை |
|
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
||
விற் சுழிப்பட்ட நாமப் பூசல் |
||
உருமிடைக் கடி இடி கரையும் |
||
பெரு மலை நாடனை 'வரூஉம்' என்றோளே. | உரை | |
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது.-கபிலர்
|