முகப்பு |
அரவுக் கிளர்ந்தன்ன |
366. பாலை |
அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் |
||
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் |
||
திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள் |
||
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ, |
||
5 |
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி |
|
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த |
||
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின் |
||
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி, |
||
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை |
||
10 |
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும் |
|
வட புல வாடைக்குப் பிரிவோர் |
||
மடவர் வாழி, இவ் உலகத்தானே! | உரை | |
உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.-மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
|