முகப்பு |
அருங்கடி அன்னை |
365. குறிஞ்சி |
அருங் கடி அன்னை காவல் நீவி, |
||
பெருங் கடை இறந்து, மன்றம் போகி, |
||
பகலே, பலரும் காண, வாய் விட்டு |
||
அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி, |
||
5 |
சென்மோ வாழி-தோழி!-பல் நாள் |
|
கருவி வானம் பெய்யாதுஆயினும், |
||
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் |
||
வான் தோய் மா மலைக் கிழவனை, |
||
'சான்றோய் அல்லை' என்றனம் வரற்கே. | உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து,'இன்னது செய்தும்' என்பாளாய்ச் சொல்லியது.-கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்
|