முகப்பு |
அருவி ஆர்க்கும்....குருதி |
399. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
||
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள் |
||
வரி அணி சிறகின் வண்டு உண மலரும் |
||
வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய |
||
5 |
நிலவரை நிவந்த பல உறு திரு மணி |
|
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி, |
||
களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும் |
||
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் |
||
பெருமை உடையள் என்பது |
||
10 |
தருமோ-தோழி!-நின் திரு நுதல் கவினே? | உரை |
நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, 'எம்பெருமான் இதற்காய நல்லது புரியும்' என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.'இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்' என்றாட்குத் தலைமகள் சொல
|