முகப்பு |
அவ் வளை வெரிநின் |
25. குறிஞ்சி |
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன |
||
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின் |
||
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப் |
||
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம் |
||
5 |
வள மலை நாடன் நெருநல் நம்மொடு |
|
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ, |
||
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது |
||
அல்லல் அன்று அது-காதல் அம் தோழி!- |
||
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா |
||
10 |
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி |
|
கண்டும், கழல் தொடி வலித்த என் |
||
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே! | உரை | |
தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது.- பேரி சாத்தனார்
|