முகப்பு |
அழிவிலர் முயலும் |
9. பாலை |
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் |
||
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு, |
||
அலமரல் வருத்தம் தீர, யாழ நின் |
||
நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின், |
||
5 |
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி |
|
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி, |
||
நிழல் காண்தோறும் நெடிய வைகி, |
||
மணல் காண்தோறும் வண்டல் தைஇ, |
||
வருந்தாது ஏகுமதி-வால் எயிற்றோயே! |
||
10 |
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் |
|
நறுந் தண் பொழில, கானம்; |
||
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே. | உரை | |
உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|