முகப்பு |
அழுந்து படு விழுப் புண் |
97. முல்லை |
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா |
||
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு, |
||
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும், |
||
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே; |
||
5 |
அதனினும் கொடியள் தானே, 'மதனின் |
|
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு |
||
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?' என |
||
வண்டு சூழ் வட்டியள் திரிதரும் |
||
தண்டலை உழவர் தனி மட மகளே. | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது.-மாறன் வழுதி
|