முகப்பு |
அறிதலும் அறிதியோ |
106. நெய்தல் |
அறிதலும் அறிதியோ-பாக!-பெருங்கடல் |
||
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள, |
||
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது, |
||
அசைஇ, உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு |
||
5 |
உயவினென் சென்று, யான், உள் நோய் உரைப்ப, |
|
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர் |
||
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி, |
||
முறி திமிர்ந்து உதிர்த்த கையள், |
||
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே? | உரை | |
பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு உணர்ந்த தலைவன், அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், தேர்ப்பாகற்குச்சொல்லியது.-தொண்டைமான் இளந்திரையன்
|