முகப்பு |
அன்பினர் மன்னும் |
224. பாலை |
அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை, |
||
'பின்பனி அமையம் வரும்' என, முன்பனிக் |
||
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே; |
||
'புணர்ந்தீர் புணர்மினோ' என்ன, இணர்மிசைச் |
||
5 |
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் |
|
இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின் |
||
'பிரியலம்' என்று, தெளித்தோர் தேஎத்து, |
||
இனி எவன் மொழிகோ, யானே-கயன் அறக் |
||
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி |
||
10 |
வில் மூசு கவலை விலங்கிய |
|
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே? | உரை | |
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் பெயர்த்தும் சொல் கடாவப்பட்டு,'அறிவிலாதேம் என்னை சொல்லியும், பிரியார் ஆகாரோ?' என்று சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|