முகப்பு |
ஆடு அமை ஆக்கம் |
178. நெய்தல் |
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன |
||
தோடு அமை தூவித் தடந் தாள் நாரை |
||
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை |
||
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது, |
||
5 |
கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும் |
|
தண்ணம் துறைவன் தேரே கண்ணின் |
||
காணவும் இயைந்தன்று மன்னே; நாணி |
||
நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன்; |
||
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப, |
||
10 |
விளிந்தன்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே. | உரை |
சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.
|