முகப்பு |
ஆழல் மடந்தை |
391. பாலை |
ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே- |
||
புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் |
||
பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் |
||
மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை |
||
5 |
ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும், |
|
பொன் படு, கொண்கான நன்னன் நல் நாட்டு |
||
ஏழிற்குன்றம் பெறினும், பொருள்வயின் |
||
யாரோ பிரிகிற்பவரே-குவளை |
||
நீர் வார் நிகர் மலர் அன்ன, நின் |
||
10 |
பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே? | உரை |
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; வரைவு உணர்த்தியதூஉம் ஆம்.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|