முகப்பு |
ஆனா நோயோடு |
185. குறிஞ்சி |
ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி, |
||
காமம் கைம்மிக, கையறு துயரம் |
||
காணவும் நல்காய் ஆயின்-பாணர் |
||
பரிசில் பெற்ற விரி உளை நல் மான் |
||
5 |
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி, |
|
இரவலர் மெலியாது ஏறும், பொறையன் |
||
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின், |
||
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து, |
||
பறவை இழைத்த பல் கண் இறாஅல் |
||
10 |
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய |
|
வினை மாண் பாவை அன்னோள் |
||
கொலை சூழ்ந்தனளால்-நோகோ யானே. | உரை | |
பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.
|