முகப்பு |
இஃது எவன்கொல்லோ |
273. குறிஞ்சி |
இஃது எவன்கொல்லோ- தோழி!-மெய் பரந்து |
||
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் |
||
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின் |
||
அறியாது அயர்ந்த அன்னைக்கு, 'வெறி' என, |
||
5 |
வேலன் உரைக்கும் என்ப: ஆகலின், |
|
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை |
||
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என் |
||
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் |
||
குன்ற நாடனை உள்ளுதொறும், |
||
10 |
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே? | உரை |
தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், 'நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும்' என்பது படச் சொல்லியது.-மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
|