முகப்பு |
இசையும் இன்பமும் |
214. பாலை |
'இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் |
||
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம்' என, |
||
வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை, |
||
'அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது |
||
5 |
அணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு' என, |
|
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி, |
||
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து, |
||
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர் |
||
கேளார்கொல்லோ-தோழி!-தோள |
||
10 |
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி |
|
நகுவது போல, மின்னி |
||
ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே? | உரை | |
உலகியலால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகன் குறித்த பருவம் கண்டு தலைமகள் சொல்லியது.-கருவூர்க் கோசனார்
|