முகப்பு |
இருங் கல் அடுக்கத்து |
122. குறிஞ்சி |
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத |
||
கருங் கால் செந்தினை கடியுமுண்டென; |
||
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி |
||
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின; |
||
5 |
'நரை உரும் உரறும் நாம நள் இருள் |
|
வரையக நாடன் வரூஉம் என்பது |
||
உண்டுகொல்? அன்றுகொல்? யாதுகொல் மற்று?' என |
||
நின்று, மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி, |
||
அன்னையும் அமரா முகத்தினள்; நின்னொடு |
||
10 |
நீயே சூழ்தல் வேண்டும்- |
|
பூ வேய் கண்ணி!-அது பொருந்துமாறே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச்சொல்லியது.-செங்கண்ணனார்
|