முகப்பு |
இருங்கழி பொருத |
145. நெய்தல் |
இருங் கழி பொருத ஈர வெண் மணல் |
||
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி |
||
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும் |
||
காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை |
||
5 |
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு |
|
புணர்ந்தனன் போல உணரக் கூறி, |
||
'தான் யாங்கு?' என்னும் அறன் இல் அன்னை; |
||
யான் எழில் அறிதலும் உரியள் நீயும்; நம் |
||
பராரைப் புன்னைச் சேரி, மெல்ல, |
||
10 |
நள்ளென் கங்குலும், வருமரோ- |
|
அம்ம வாழி!-தோழி அவர் தேர் மணிக் குரலே! | உரை | |
இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி வரைவுகடாயது.-நம்பி குட்டுவன்
|