முகப்பு |
இல் எழு வயலை |
179. பாலை |
இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென, |
||
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி, |
||
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள் |
||
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு, |
||
5 |
யானும் தாயும் மடுப்ப, தேனொடு |
|
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி, |
||
நெருநலும் அனையள்மன்னே; இன்றே, |
||
மை அணற் காளை பொய் புகலாக, |
||
அருஞ் சுரம் இறந்தனள் என்ப-தன் |
||
10 |
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே. | உரை |
மனை மருட்சி
|