முகப்பு |
இலை மாண் பகழிச் |
352. பாலை |
இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய |
||
அன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன் |
||
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை, |
||
அழல் போல் செவிய சேவல் ஆட்டி, |
||
5 |
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி |
|
பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று, |
||
தேர் திகழ் வறும் புலம் துழைஇ, நீர் நயந்து, |
||
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ |
||
அருஞ் சுரக் கவலை வருதலின், வருந்திய |
||
10 |
நமக்கும் அரிய ஆயின: அமைத் தோள் |
|
மாண்புடைக் குறுமகள் நீங்கி, |
||
யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே! | உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது.-மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
|