முகப்பு |
இவள் தன் காமம் |
223. நெய்தல் |
இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின் |
||
அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி, |
||
பகலும் வருதி, பல் பூங் கானல்; |
||
இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள் |
||
5 |
அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால் |
|
எல்லி வம்மோ!-மெல்லம் புலம்ப! |
||
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின் |
||
துறையினும் துஞ்சாக் கண்ணர் |
||
பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே. | உரை | |
பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று, அதுவும் மறுத்து, வரைவு கடாயது.-உலோச்சனார்
|