இளமை தீர்ந்தனள்

351. குறிஞ்சி
'இளமை தீர்ந்தனள் இவள்' என வள மனை
அருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து இவள்
பசந்தனள் என்பது உணராய்; பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
5
வருந்தல் வாழி-வேண்டு, அன்னை!-கருந் தாள்
வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த
களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து,
சிறு தினை வியன் புனம் காப்பின்,
பெறுகுவள்மன்னோ என் தோழி தன் நலனே.

தோழி அருகு அடுத்தது.-மதுரைக் கண்ணத்தனார்