முகப்பு |
இறுகு புனம் மேய்ந்த |
265. குறிஞ்சி |
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் |
||
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை |
||
வீளை அம்பின் வில்லோர் பெருமகன், |
||
பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும் |
||
5 |
பாரத்து அன்ன-ஆர மார்பின் |
|
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன- |
||
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக் |
||
கலி மயில் கலாவத்து அன்ன, இவள் |
||
ஒலி மென் கூந்தல் நம் வயினானே. | உரை | |
பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது.- பரணர்
|