முகப்பு |
ஈன் பருந்து உயவும் |
3. பாலை |
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப் |
||
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல், |
||
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து, |
||
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் |
||
5 |
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் |
|
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை |
||
உள்ளினென் அல்லெனோ, யானே-உள்ளிய |
||
வினை முடித்தன்ன இனியோள் |
||
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே? | உரை | |
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.-இளங்கீரனார்
|