முகப்பு |
உடும்பு கொலீஇ |
59. முல்லை |
உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து, |
||
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி, |
||
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல |
||
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து, |
||
5 |
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் |
|
வன் புலக் காட்டு நாட்டதுவே-அன்பு கலந்து |
||
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து |
||
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை |
||
நுண் முகை அவிழ்ந்த புறவின் |
||
10 |
பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே. | உரை |
வினைமுற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.- கபிலர்
|