முகப்பு |
உரவுக் கடல் |
63. நெய்தல் |
உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர் |
||
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண், |
||
கல்லென் சேரிப் புலவற் புன்னை |
||
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் |
||
5 |
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால், |
|
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப, |
||
பசலை ஆகி விளிவதுகொல்லோ- |
||
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் |
||
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி |
||
10 |
திரை தரு புணரியின் கழூஉம் |
|
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே? | உரை | |
அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-உலோச்சனார்
|