முகப்பு |
உலகம் படைத்த |
337. பாலை |
உலகம் படைத்த காலை-தலைவ!- |
||
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே- |
||
முதிரா வேனில் எதிரிய அதிரல், |
||
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர், |
||
5 |
நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய |
|
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன், |
||
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால் |
||
தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும் |
||
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது, |
||
10 |
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே. | உரை |
தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம்.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|