உலகிற்கு ஆணியாகப்

139. முல்லை
உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ,
பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு
ஏயினை, உரைஇயரோ!-பெருங் கலி எழிலி!
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
5
எழீஇயன்ன உறையினை! முழவின்
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்-
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்,
விரவு மலர் உதிர வீசி-
10
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே!

தலைவன் வினைமுற்றி வந்து பள்ளியிடத்தானாக, பெய்த மழையை வாழ்த்தியது.-பெருங்கௌசிகனார்