முகப்பு |
உலகிற்கு ஆணியாகப் |
139. முல்லை |
உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ, |
||
பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு |
||
ஏயினை, உரைஇயரோ!-பெருங் கலி எழிலி! |
||
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு |
||
5 |
எழீஇயன்ன உறையினை! முழவின் |
|
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்- |
||
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு |
||
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர், |
||
விரவு மலர் உதிர வீசி- |
||
10 |
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே! | உரை |
தலைவன் வினைமுற்றி வந்து பள்ளியிடத்தானாக, பெய்த மழையை வாழ்த்தியது.-பெருங்கௌசிகனார்
|