முகப்பு |
உலவை ஓமை |
252. பாலை |
'உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி, |
||
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம், |
||
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின அல்லது, |
||
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்' என, |
||
5 |
வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த |
|
வினை இடை விலங்கல போலும்-புனை சுவர்ப் |
||
பாவை அன்ன பழிதீர் காட்சி, |
||
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து |
||
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், |
||
10 |
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய் |
|
நல் நாப் புரையும் சீறடி, |
||
பொம்மல் ஓதி, புனைஇழை குணனே! | உரை | |
'பொருள்வயிற் பிரியும்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.-அம்மெய்யன் நாகனார்
|