முகப்பு |
உவர் விளை உப்பின் உழா |
331. நெய்தல் |
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் |
||
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி, |
||
கானல் இட்ட காவற் குப்பை, |
||
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி, |
||
5 |
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி, |
|
'எந்தை திமில், இது, நுந்தை திமில்' என |
||
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் |
||
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப! |
||
இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்; |
||
10 |
இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம் |
|
பிறர் பிறர் அறிதல் யாவது- |
||
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே. | உரை | |
தோழி இரவுக்குறி நேர்ந்தது.-உலோச்சனார்
|