முகப்பு |
உள்ளார் கொல்லோ....கொடுஞ்சிறைப் |
241. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-கொடுஞ் சிறைப் |
||
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய |
||
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற, |
||
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின், |
||
5 |
வேழ வெண் பூ விரிவன பலவுடன், |
|
வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய, |
||
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு |
||
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய, |
||
எல்லை போகிய பொழுதின் எல் உற, |
||
10 |
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து, |
|
பல் இதழ் உண்கண் கலுழ, |
||
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே? | உரை | |
தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.-மதுரைப் பெருமருதனார்
|