முகப்பு |
உள்ளுதொறும்.....பிடி |
107. பாலை |
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்ப் |
||
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் |
||
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை, |
||
செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம் |
||
5 |
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும், |
|
புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம் |
||
சென்ற காதலர்வழி வழிப்பட்ட |
||
நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து, |
||
ஆனாக் கௌவை மலைந்த |
||
10 |
யானே, தோழி! நோய்ப்பாலேனே. | உரை |
பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது
|