முகப்பு |
எம்ஊர் வாயில் |
83. குறிஞ்சி |
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய |
||
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய, |
||
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர், |
||
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை! |
||
5 |
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், |
|
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்; |
||
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத் |
||
துஞ்சாது அலமரு பொழுதின், |
||
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே. | உரை | |
இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது.-பெருந்தேவனார்
|