முகப்பு |
எய்ம் முள் அன்ன |
98. குறிஞ்சி |
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின் |
||
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி |
||
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி |
||
நூழை நுழையும் பொழுதில், தாழாது |
||
5 |
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, |
|
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன் |
||
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்! |
||
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த் |
||
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி, |
||
10 |
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- |
|
வைகலும் பொருந்தல் ஒல்லாக் |
||
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே! | உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் தோழி வரைவு கடாயது.-உக்கிரப் பெருவழுதி
|