முகப்பு |
என்னர் ஆயினும் |
64. குறிஞ்சி |
என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக! |
||
அன்னவாக இனையல்-தோழி!-யாம் |
||
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்? |
||
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் |
||
5 |
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் |
|
வறனுற்று ஆர முருக்கி, பையென |
||
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என் |
||
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென, |
||
வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர் |
||
10 |
வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது |
|
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம் |
||
காமம் படர் அட வருந்திய |
||
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே! | உரை | |
பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.- உலோச்சனார்
|