முகப்பு |
ஐதே கம்ம இவ் உலகு |
240. பாலை |
ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே- |
||
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள் |
||
கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி, |
||
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் |
||
5 |
துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும், |
|
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில், |
||
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி, |
||
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல் |
||
யானை இன நிரை வௌவும் |
||
10 |
கானம் திண்ணிய மலை போன்றிசினே. | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.-நப்பாலத்தனார்
|