முகப்பு |
ஐய குறு மகட் |
20. மருதம் |
ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி, |
||
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த் |
||
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் |
||
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர, |
||
5 |
செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில், |
|
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி, |
||
சென்றனள்-வாழிய, மடந்தை!-நுண் பல் |
||
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்; |
||
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை, |
||
10 |
பழம் பிணி வைகிய தோள் இணைக் |
|
குழைந்த கோதை, கொடி முயங்கலளே. | உரை | |
பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைவி சொல்லியது; வாயிலாகப் புக்க தோழிதலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-ஓரம்போகியார்
|