முகப்பு |
ஒரு மகள் உடையேன் |
184. பாலை |
ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும் |
||
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு |
||
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்; |
||
'இனியே, தாங்கு நின் அவலம்' என்றிர்; அது மற்று |
||
5 |
யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! |
|
உள்ளின் உள்ளம் வேமே-உண்கண் |
||
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என் |
||
அணி இயற் குறுமகள் ஆடிய |
||
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே. | உரை | |
மனை மருட்சி
|