முகப்பு |
ஒள் இழை மகளிரொடு |
155. நெய்தல் |
'ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய், |
||
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய், |
||
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்! |
||
யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்: |
||
5 |
கண்டோர் தண்டா நலத்தை-தெண் திரைப் |
|
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ? |
||
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ? |
||
சொல், இனி, மடந்தை!' என்றனென்: அதன் எதிர் |
||
முள் எயிற்று முறுவல் திறந்தன; |
||
10 |
பல் இதழ் உண்கணும் பரந்தவால், பனியே. | உரை |
இரண்டாம் கூட்டத்துத்தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது; உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைவன் சொற்றதூஉம் ஆம்.-பராயனார்
|