முகப்பு |
வண்டல் தைஇயும் |
254. நெய்தல் |
வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும், |
||
குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும், |
||
துனி இல் நல்மொழி இனிய கூறியும், |
||
சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச் |
||
5 |
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப! |
|
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் |
||
அயினி மா இன்று அருந்த, நீலக் |
||
கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின் |
||
துணை இலை தமியை சேக்குவை அல்லை- |
||
10 |
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி, |
|
வானம் வேண்டா உழவின் எம் |
||
கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலினே | உரை | |
தோழி படைத்து மொழிந்தது.-உலோச்சனார்
|