முகப்பு |
வம்ப மாக்கள் |
298. பாலை |
வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி, |
||
செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் |
||
மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட |
||
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் |
||
5 |
அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப் |
|
பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று-இவள் |
||
கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும், ஒரு திறம் |
||
பற்றாய்-வாழி, எம் நெஞ்சே!-நல் தார்ப் |
||
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண், |
||
10 |
ஒருமை செப்பிய அருமை, வான் முகை |
|
இரும் போது கமழும் கூந்தல், |
||
பெரு மலை தழீஇயும், நோக்கு இயையுமோமற்றே? | உரை | |
தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங் கிச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது.- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
|